என் உயிர்

உன் அன்பே.
என் வெளிச்சம்
உன் காதல்
எனக்கு காவல்
உன் பேச்சு..
எனக்கு..இன்பம்
உன் குரல்..
என் தேடல்
உன் நலம்.
என் நிம்மதி
உன் நிம்மதி.
என் சந்தோசம்
உன் உயிர்...
அது என் உயிர்.


காதலி மீது
சந்தேகம் கொள்பவன்
தன் மீது
நம்பிக்கை இல்லாதவன்.
காதல் கருவறையில்
காதல் விதை விதைத்தபின்
இடையில்
கருக்கலைப்பது
அவனது இயலாமை தானே!
தன்மீது நம்பிக்கை இல்லாதவர்கள்
காதலிக்க தொடங்குமுன்
சற்று யோசிப்பது நல்லது
காதல் என்பது
ஓடிக்கொண்டிருக்கும் நதி
இடையில் நின்று விட்டால்
அதன் பெயர் சாக்கடை
பின்னர்
உயிரோடு வாழ்வதை விட
மூக்கடை பட்டு சாகலாம்
ஏனெனில்
காதல் என்பது மாக்கடையில்
விற்கும் பொருளல்ல......!



காதல் ஏக்கம் 

இரவில் தேடிய கதிரவனாய்
என் காதல் .......!

அவளோடு என் காதல் ஒரு நாள் ஈசல் போல .........!


மரத்தில் வாழும் பறவையாய்

மாதம் ஒரு மரம் அவளது காதல் ......!

அவளும் என்னை மன்னித்தால்

என் கல்லறையில் .....
கவிதைகள் போல அழகாய் இருக்கும் பொய்கள் தான் ,,
இந்த பெண்கள் .......
அதை ரசிக்க மட்டும் நினைப்பவன் ரசிகன்..
இதை ஏற்று கொண்டவன் பித்தன் ..
இதை உணர்ந்து கொண்டவன் ஜித்தன் .......
                                 காதல் ஏக்கம்

மங்கள ஓசைகள் கேட்டன காதில்
மங்கை அவள் வருகை தெரிந்தது மனதில்
வந்த அவள்- பார்த்தது பார்வை
மார்பினுல் ஏதோ அடித்தது ஓசை!

சில்லென மயிர்கள்
சிலிர்த்தன உடலில்
பட்டென மனதில் படபட ஏக்கம்
சட்டென உடலே நனைத்தது வியர்வை!

மங்கையின் பார்வை ஈர்த்தது என்னை
கூந்தலின் அழகு அசைத்தது கண்னை
அவள் குரல் கேட்க அலைந்தது செவிகள்
அவள் அருகே நகர்ந்தது என் உடல்!

வந்தது காதல் வாலிபவயதில்
வந்ததும் காதல் கிடைத்தது புது யுகம்.
சொல்லிட என் மனம் துணியலை அப்போ
சில்லென இருந்தது ஏக்கம் என்னுள்!

மூ எழுத்து இணைந்தது காதல்
இத்தனை உணர்வுகள் கொண்டதா காதல்
இப்படி ஒரு சுகம் கண்டிடவேண்டும்
அப்படியே என் உயிர் சென்றிடவேண்டும்!!

                                   காதல் ஏக்கம்

பசிக்கும் பருவம் இது
ஆனால் பசியோ எடுப்பது இல்லை.
ரசிக்கும் கண்கள் இங்கே
ஆனால் அவளோ என் கண்ணுள்

பல மணி நேரம் பேசினேன்
பேசியது நினைவில் இல்லை.
பல மணி நேரம் தூங்கினேன்
அவளோ என் கண்ணுள்ளே.

குடித்தேன் வெறித்தேன்
அவளை மறக்க முடியவில்லை
விலகினேன் வெறுத்தேன்
அப்போதும் முடியவில்லை.

அவள் தந்த அற்புத இன்பம்
அவளுக்கு மட்டுமே தெரிந்த
ஆரோக்கிய இன்பம்.
மறைந்த கதிரவனை எதிர்பார்த்தேன்
அவன் மறு நாள் வந்தான்
ஆனால் மறைந்த என் காதலி
எப்போது திரும்பி வருவாள்.

ஏன் இந்த விளையாட்டு!
எல்லாம் விதியின் விளையாட்டா?
இல்லை
எல்லாம் காதலின் விளையாட்டா!?

                                                              






 

This free website was made using Yola.

No HTML skills required. Build your website in minutes.

Go to www.yola.com and sign up today!

Make a free website with Yola