கவி அரசன் இன் கவிதைகள்          Kavi Arasan IN Kavithaikal 

எனக்கு பிடித்த பொருட்கள் எல்லாம் கிடைக்காமல் போன போதும் என்னை உனக்கு பிடிக்கும் என்று,
ஒரு வார்த்தை கூறினாய்...
என்றும் நீ மட்டும்தான்
************************************************************************************
கண் இல்லாமல்
காதல் வரலாம், கற்பனை இல்லாமல் கவிதை வரலாம், ஆனால் உண்மையானஅன்பு
இல்லாமல் நட்பு வராது, இதயத்தில் இடம் கொடுப்பது காதல் இதயத்தையேஇடமாக
கொடுப்பது நட்பு, நான் நேசிக்கும் பலர் என்னை நேசிக்க மறந்தாலும்,என்னை
நேசிக்கும் உன்னை உயி௫ள்ள வரை மறக்க மாட்டேன்
************************************************************************************
உன் நினைவுகளால்
என் இதயத்தின் துடிப்புகள்
வெகுவாக குறைந்து கொண்டே
வருகிறது
************************************************************************************
யாருக்கு வேண்டுமானாலும்
உன் உடல் சொந்தமாகலாம்
எந்த நபரும் உன்னால்
வசீகரிக்கபடலாம்
உன் இதழ்களை
யாரேனும் சுவைக்கலாம்
ஆனால் உன் இதயத்தை
தொட்டவன் நான் மட்டுமே..
************************************************************************************
என்னதான் என் இதயம் உன்னால் காயப்பட்டாலும்-மருந்தாக உன் நினைவைதான் நினைக்கின்றது
************************************************************************************
உன்னிடம் நான் சொல்ல மறந்த வார்த்தைகளில் இதையாவது சொல்லியிருக்கலாம்.."நான் உன்னை காதலிக்கின்றேன்" என்று..
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உனக்காக எத்தனை முறை துடிக்கின்றது என் இதயம்..எனக்காக ஒரு முறை கூடவா துடிக்கவில்லை உன் இதயம்.
---------------------------------------------------------------------------------------------------------
உன் நினைவுகள் என்னை
தின்று கொண்டிருக்கும் வரை
நான் உன்னை மறப்பதில்லை
என் உயிர் மூச்சு பிரியும் வரை
உன் நினைவுகள் என்னை விட்டு
விலகுவதுமில்லை....



  உலக அழிவு
என் உலகம் என்றோ அழிந்து விட்டது
 நீ என்னை பிரிந்தாயே...
   அன்றுதான் அந்த அழிவு நிகழ்ந்தது!!


கலங்காதே
 மறந்து விடுவேன் என்று எண்ணாதே
மறவாமல் வாழுவேன்
உன் நினைவுகளோடும்
என் காதலோடும்.


கற்றேன்
உன்னோடு காதலில்
விழுந்த என் இதயத்துக்கு
கவிதை எழுத
கற்று தந்தது
உன் இனிமையான மொழிகள் ..............

                                                 தொடரும்
நான் இருக்கும் வரை என் மனதோடு இருக்கும் உன் நினைவு-நான் இறந்த பின்னும் இருக்கும் என் கல்லறையோடு..
நீ வெறுத்தாலும் கூட..

 

அடி பெண்ணே!
உன் உணர்வினில் கலந்த
உன் கவிதை நான் பேசுகிறேன்!
உன் உணர்வினில் கலந்து
உன் மூச்சுக்குள் மூச்சாக
வாழ்ந்துகொண்டிருக்கிறேனே!

 

உடல் கொண்ட ஆசை அல்ல..,
என் உயிர் கொண்ட ஆசை இது..
என் உயிர் போகும் முன்னால் அதை வெற்றி கொள்ளுவேன்...

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

உண்மையில் நான் ஒரு கடிகாரம்
ஏன் சுற்றுகிறோம் என்று தெரியாமல்
சுற்றுதம்மா இங்கு என் வாழ்வும்
உண்மையில் என் மனம் மெழுக்கும்
சிலர் வீட்டுக்குத்தான் அது ஒழி வீசும்
கடைசி வரை தனியாய் உருகும்


      இந்த உலகம் இயங்குவதே காதலால் மட்டும் தான்

பூக்களில் வாசம் இல்லை
வாழ்கையில் ஆசையில்லை
யார் நெஞ்சில் யார் இருப்பார்
ஆண்டவன் சொல்லவில்லை

Kavi Arasan   Jaffna  Nallur , Jaffna,

Translate This Page

This free website was made using Yola.

No HTML skills required. Build your website in minutes.

Go to www.yola.com and sign up today!

Make a free website with Yola